இரட்டை தேங்காயை அம்மனுக்கு பூசாரிகள் காண்பிக்கும் காட்சி. 
உள்ளூர் செய்திகள்

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் இரட்டை தேங்காய்

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்சன்னதியில் தேங்காய் கொடுத்தார்.

விழுப்புரம்:

மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கிலும் அமாவாசை யன்று லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

நேற்று பெண் பக்தர் ஒருவர் உற்சவர் அம்மன் சன்னதியில் தேங்காயை கொடுத்தார். அதை பூசாரிகள் உடைக்கும் போது அதன் உட்புறம் இரண்டு மூடிகள் இருந்தது அங்கிருந்தவர்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.