உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் தி.மு.க. ஆலோசனை கூட்டம்- ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும்.

TNLGanesh

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இதில் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் அடையும் வரையில் ஒரு கோடிக்கும் மேலான பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், வேலூரில் தி.மு.க. முப்பெரும் விழா முதல்-அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது போன்று மாவட்ட கழகம் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் சார்பிலும் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும், தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில் சிறப்பாக நடத்த வேண்டும், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.