ெபாள்ளாச்சி:
கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்தி–றனாளிகளுக்கான குறைதீர்ப்பு முகாமை நடத்த மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் பொள்ளாச்சி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் பொள்ளாச்சி , ஆனைமலை, கிணத்துக்கடவு தாலூக்காக்களில் இருந்து பயனாளிகள்பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவிடம் வழங்கினர். மொத்தம் 175 மனுக்கள் வழங்கினர். இந்த முகாமில் அரசு மருத்துவர் ராஜா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.