குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வாகன விபத்து வழக்கில் ஊனச் சான்று பெறுவதற்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.இதற்கு மாவட்ட நீதிபதி முத்துசாரதா தலைமை தாங்கினார்.
விழாவில் தலைமை குற்றவியல் நீதிபதி மோகனா, டாக்டர்கள் கவிதா, லலித் குமார், வக்கீல்கள் சங்க தலைவர் செந்தில் குமார், செயலாளர் உதயகுமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக வக்கீல் சரவணகுமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் விபத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 200 நபர்கள் முகாமின் மூலம் பயன் அடைந்தனர்.