மன்னார்குடியில் அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணியினர் ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  
உள்ளூர் செய்திகள்

கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்ககோரி ஆர்ப்பாட்டம்

மன்னார்குடியில் அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணியினர்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றதுஅ.ம.மு.க. மாவட்ட செயலாளர் காமராஜ் கண்டன உரையாற்றினார்.

மன்னார்குடி:

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக்கோரி மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணியினர்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அ.ம.மு.க.வினரும் கலந்து கொண்டனர்.

ஒ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

நகரச் செயலாளர் லெட்சுமணன் வரவேற்று பேசினார்.

அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் காமராஜ் கண்டன உரையாற்றினார்.

இதில் அ.ம.மு.க. நகர செயலாளர் ஆனந்தராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.