தமிழகத்தில் கொரோனா 3வது அலை தீவிரமடைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிய வேண்டும் என மருத்துவ துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இருந்தபோதும் பெரும்பாலானோர் அலட்சியமாக இருப்பதால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.