உள்ளூர் செய்திகள்

குன்னூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

முறையாக சம்பளம் வழங்காமல் காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம்

மாலை மலர்

அருவங்காடு,

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பழமை வாய்ந்த அரசு லாலி மருத்துவமனை நவீனப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே அங்கு நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர். எனவே நோயாளிகளை பராமரிக்க ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இதனிடையே ஊட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் 18 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் குன்னூர் அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் 11 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதனைகூட முறையாக வழங்காமல் காலதாமதம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.இந்த நிலையில் குன்னூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.