ஆலோசனை கூட்டம் நடந்தது. 
உள்ளூர் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி தொடர்பான ஆலோசனை கூட்டம்

சிலைகள் 6 அடிக்கு குறைவாக இருக்க வேண்டும்.விநாயகர் சிலைகளை பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களின் அருகே வைக்கக்கூடாது.

மாலை மலர்

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமை தாங்கினார்.

சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார், நிலைய எழுந்தர் குலோத்துங்கன் முன்னிலை வகித்தனர்.

இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி செந்தில் குமார், சம்பத்,சண்முகம் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்துகொ ண்டனர்.

கூட்டத்தில் இன்ஸ்பெ க்டர் சிவக்குமார் பேசுகை யில், விநாயகர் சிலையை புதிய இடத்தில் வைக்க கூடாது.

கடந்த வருடம் வைத்த இடத்திலேயே வைக்க வேண்டும்.

சிலைகள் 6 அடிக்கு குறைவாக இருக்க வேண்டும்.

விநாயகர் சிலை களை பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களின் அருகே வைக்கக்கூடாது.

விநாயகர் சதுர்த்தி முடிந்த மறு தினமே சிலைகளை கரைக்க வேண்டும்.

ஊர்வலத்தின் போது ஜாதி மதம் சார்ந்த கோஷங்களை பாடல்களை பயன்படுத்தக் கூடாது.

எளிதில் தீப்பிடிக்கும் கொட்டகைகளில் சிலைகளை வைக்கக்கூடாது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பேசினார்.

இந்த கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முத்து, முருகானந்தம், ஹரி, கமல், கண்ணன், குருசாமி உள்ளிட்ட ஏராளமா னவர்கள் கலந்து கொண்டனர்.