சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் உமா மகேஸ்வரி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வாங்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனியாக பிரித்து வாங்கும் படியும், வார்டுகளில் வாறுகால் சுத்தம் செய்யும்படியும் சேர்மன் உமா மகேஸ்வரி, தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில் நகராட்சி கமிஷனர் சபாநாயகம், நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர், சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், மாரிசாமி மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.