ஆத்தூர்:
கெங்கவல்லி சுற்று வட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் மற்றும் அரசு மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கெங்கவல்லி போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மணிமேகலை (வயது 45) என்பவருக்கு சொந்தமான வீட்டில் சோதனை செய்த போது அங்கு அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் மணிமேகலையைகைது செய்தனர். அவர் வைத்தி ருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.