தருமபுரி எம்.எல்.ஏ வெங்கடேஷ்வரன் சாலை அகலப்படுத்தும் பணிக்கு பூமிபூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

சாலை அகலப்படுத்தும் பணிக்கு பூமிபூஜை

ரூ.4 கோடி 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அப்பணிக்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

மாலை மலர்

தருமபுரி,

தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, ஏமகுட்டியூர் பிரிவு செல்லும் சாலையில் நேருநகர் அருகில் தடுப்பு சுவர் அமைத்து, சாலையை அகலப்படுத்தி 1.4 கிலோ மீட்டர் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4 கோடி 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அப்பணிக்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.

தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் நாகராஜ், உதவி கோட்டப் பொறியாளர் ஜெயசங்கர், உதவி பொறியாளர் கிருபாகரன், தடங்கம் கவுன்சிலர் மகேஸ்வரி, வார்டு உறுப்பினர் சக்தி, உள்ளிட்ட ஊர்பொது மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.