சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள். 
உள்ளூர் செய்திகள்

ஆடி திருவோண திருமஞ்சனம்

அது சமயம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பங்கஜவல்லி தாயார் சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பங்கஜவல்லி தாயார் சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவோண ஜேஸ்டாபிஷேகம் என்கிற பெரிய திருமஞ்சனம் நடைபெற்றது.

அது சமயம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது. விழாவில் கோயில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், தக்கார் லட்சுமி, பாபநாசம் இறைப்பணி மன்ற தலைவர் குமார், கோவில் எழுத்தர் முருகபாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.