உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கு பூமிபூஜை போடப்பட்டது. 
உள்ளூர் செய்திகள்

பேராவூரணியில், உயர்மட்ட பாலம் கட்டும் பணி பூமிபூஜை

மழை காலங்களில் தண்ணீர் பெருகி பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.10 மீட்டர் அகலம், 63 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட பாலம் கட்ட ரூ. 6 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு.

பேராவூரணி:

பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலையில் ஆண்டவன்கோவில் பூனைகுத்தி காட்டாற்று பாலம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

குறுகிய பாலமாக இருப்பதால் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து வாகனங்கள் செல்லும் நிலையில் உள்ளது.

மழை காலங்களில் தண்ணீர் பெருகி பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.

இதனால் பேராவூரணி தனித் தீவாக மாறிவிடுகிறது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

கடந்த ஆண்டு பெய்த கனமழையால் ஆண்டவன் கோவில், இந்திராநகர், கொன்றைக்காடு, காலகம், ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பேராவூரணி மருத்துவமனைக்கு வர முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

பலத்த மழையால் பாலம் சேதமடைந்து விரிசல்கள் ஏற்பட்டது.

இதுகுறித்து பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று ஆய்வு குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்து உயர் மட்ட பாலம் கட்ட பரிந்துரை செய்தனர்.

இதன் பேரில் தமிழ்நாடு அரசு 10 மீட்டர் அகலம் 63 மீட்டர் நீளம் கொண்ட உயர் மட்ட பாலம் கட்ட ரூபாய் 6 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்மட்ட பாலம் கட்டும் பணியை பேராவூரணி எம்.எல்.ஏ நா.அசோக்குமார் பூமிபூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சேதுபா வாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமா ணிக்கம், பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், திமுக ஒன்றிய செயலாளர்கள் பேராவூரணி தெற்கு க.அன்பழகன், பேராவூரணி வடக்கு கோ.இள ங்கோவன், சேதுபாவாசத்திரம் தெற்கு வை.ரவிச்சந்திரன், நகர செயலாளர் சேகர், ஒன்றிய குழு உறுப்பினர் குழ.செ.அருள்நம்பி, அப்துல் மஜீது, தஞ்சாவூர் நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் (திட்டங்கள்) சுதாகர், பேராவூரணி உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரன், உதவி பொறியாளர் அருண்கு மார் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.