உள்ளூர் செய்திகள்

திறப்பதற்கு முன்பே மதுபான பாராக மாறிப்போன வாரச்சந்தை

அரியலூரில் திறப்பு விழா காணும் முன்பே மதுபான பாராக வாரசந்தை மாறிய அவலம்சேறும், சகதியுமாக காணப்படும் வாரச்சந்தையை சீர்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது

அரியலூர்,

அரியலூர் நகராட்சியில் ரூ.1.18 கோடியில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. திறப்பு விழா காண்பதற்கு முன்பே மதுபான பிரியர்களின் டாஸ்மாக் பாராக செயல்பட தொடங்கிவிட்டது. மாவட்ட, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SCROLL FOR NEXT