அரியலூர்,
அரியலூர் நகராட்சியில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. மழையின் காரணமாக இந்த பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி பேருந்துக்குள் செல்கின்றனர். எனவே தற்காலிக பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.