ஆலங்குளம்:
தேசிய அளவில் கேரளா மாநிலம் கொச்சி ராஜுவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் நாடு முழுவதும் இருந்து கலந்து கொண்டனர்.
இதில் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவி பாக்கியவதி மற்றும் 7-ம் வகுப்பு மாணவன் கிஷோர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு முதல் இடத்தில் வெற்றி பெற்றனர். மேலும் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய அளவில் பெற்ற முதல் பதக்கம் இது ஆகும்.