விழுப்புரம்:
விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ரவி.அவரது மகன் பிரதீப் (வயது 19) இவர் விழுப்புரம் அறிஞர்அண்ணா கல்லூரியில் இயற்பியல் 2-ம்ஆண்டுபடித்து வந்தார்.இந்நிலையில்பிரதீப் விழுப்புரத்திலிருந்து மாம்பழப்பட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது காணை அழகம்மாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிள் சென்றபோது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போ து எதிர்பாராத விதமாக பிரதீப் தனது மோட்டார் சைக்கிளை லாரி மீது மோதி சம்பவ இடத்திலே பரிதா பமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.