உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே மணல் திருடிய வாலிபர் கைது

பண்ருட்டி அருகே மணல் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.அருண்குமார் சட்டத்திற்கு விரோதமாக மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

கடலூர்:

பண்ருட்டி அடுத்த மேல் குமாரமங்கலம் தென் பெண்ணை ஆறுகளிலிருந்து மாட்டு வண்டிகளில் இரவில் சட்ட விரோதமாக மணல் ஏற்றி வருவதாக, பண்ருட்டி போலீஸ் நிலையத்திற்குத் தகவல் வந்தது. இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீஸார், இன்று அதிகாலை அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டு இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (26) சட்டத்திற்கு விரோதமாக மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார், அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்து மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT