உள்ளூர் செய்திகள்

மலை ெரயில் பாதையில் நடமாடிய காட்டு யானை

ெரயில் பாதை ஓரத்தில் ஒற்றை காட்டு யானை நடமாடியது. பயணிகள் பார்த்து உற்சாகமடைந்தனா்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ெரயில் பாதை அடர்ந்த வனத்திற்கு நடுவே உள்ளது. அந்த ரெயிலில் செல்லும் போது இயற்றை அழகினையும், காட்டில் வசிக்கும் யானை கள், காட்டெருமைகள், சிறுத்தைகள் என பல்வேறு வனவிலங்குகளையும் காண முடியும்.இதனால் இந்த பாதை வழியாக பயணிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்புவார்கள்.இந்த நிலையில் மலைரெயில் பாதையில் உள்ள ரன்னிமேடு, ஹில்குரோவ், ஆடா்லி போன்ற ெரயில் நிலையங்கள் அடா்ந்த வனப் பகுதிக்குள் உள்ளதாலும், யானைகள் வழித்தடம் என்பதாலும் இந்த ெரயில் நிலையத்துக்குள் யானைகள் வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ெரயில் பாதை ஓரத்தில் ஒற்றை காட்டு யானை நடமாடியது.

இதனை ரெயிலில் பயணித்த பயணிகள் பார்த்து உற்சாகமடைந்தனா். சிலா் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனா்.