விழுப்புரம்:
சென்னையில் இ ருந்து அரசு பஸ் 48 பயணிகளை ஏற்றுக் கொண்டு மேல்மலையனூருக்கு வந்து கொண்டிருந்தது. திண்டிவனம் அடுத்த மேல் பேட்டை அருகே அரசு பேருந்து வரும்போது திடீரென டீசல் டியூப் கட் ஆகி அரசு பஸ் நடுரோட்டில் நின்றது. இதனால் பஸ்சில் பயணம் செய்த மேல்மலையனூருக்கு செல்லும் பயணிகள் 48 பேர் நடுரோட்டில் இறக்கிவிடப்பட்டனர்.
அரை மணி நேரத்துக்கு மேலாக மாற்று பஸ் வர வைக்கப்படாமல் நடுரோட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் பயணிகள் காத்திருந்து அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.