கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக ராஜேஸ்வரி பணியாற்றி வருகிறார். இவரது தந்தை ராஜாமணி (வயது 65 ). இவர்நேற்று காலை அய்யனார் கோவில்தெருவில் உள்ள அவரது வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லைஅதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ராஜாமணியை பல்வேறு இடங்களில் ேதடினர்.
எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.இதுகுறித்து பண்ருட்டி போலீசில் ராஜேஸ்வரி புகார்கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிந்து ராஜாமணி எங்கு சென்றார். என்ன ஆனார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.