கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் துணிப்பைகளை வழங்கிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

கிராம உதயம் சார்பில் 500 துணிப்பைகள் வழங்கல்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு 500 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் மற்றும் 500 துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் அப்துல் கலாமின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை கோபாலசமுத்திரத்தில் உள்ள கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு 500 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் மற்றும் 500 துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் அப்துல் கலாமின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மரக்கன்றுகள் மற்றும் துணிப்பைகளை வழங்கினார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஸ்வரி வரவேற்று பேசினார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் முருகன், பால சுப்பிரமணியன், கார்த்திக், சசிகலா, ஆறுமுகத்தாய் ஆகியோர் அப்துல்கலாம் பற்றி கருத்துரை வழங்கினர்.

கிராம உதயம் தனி அலுவலர் கணேசன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மரக்கன்றுகள் துணிப் பைகள் வழங்கப்பட்டன.