உள்ளூர் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி அருகே அரசு பஸ் டிரைவரிடம் 5 பவுன் நகை கொள்ளை

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேல்முகநாடார் தெருவை சேர்ந்தவர் திரவியம் ஜெபக்குமார் (வயது48). அரசு பஸ் டிரைவர். சம்பவத்தன்று வங்கியில் அடகு வைத்த 5 பவுன் நகையை மீட்டு தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து வீட்டிற்கு சென்றார்

நெல்லை:

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேல்முகநாடார் தெருவை சேர்ந்தவர் திரவியம் ஜெபக்குமார் (வயது48). அரசு பஸ் டிரைவர்.

5 பவுன் நகை கொள்ளை

இவர் சம்பவத்தன்று வங்கியில் அடகு வைத்த 5 பவுன் நகையை மீட்டு தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து வீட்டிற்கு சென்றார். அப்போது கல்லிடைக் குறிச்சி அருகே ஒரு மருந்து கடையில் மருந்து வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு சென்றார்.

பின்னர் வந்த போது அவரது மோட்டார் சைக்கிளின் பெட்டி உடைக்கப்பட்டு கிடந்த கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை கொள்ளை போயி ருந்தது.

இது தொடர்பாக அவர் கல்லிடைக்குறிச்சி போலீ சில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி.காமி ராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் திரவியம் ஜெபக்குமாரை பின் தொடர்ந்து வருவது தெரியவந்தது. அதனை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.