விழுப்புரம்:
மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தின் மதுபாட்டில் விற்பனை செய்தார். இதனை அறிந்த மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர் வைத்திருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து முருகனை கைது செய்தனர். மரக்காணம் அருகே கழிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அம்சா. இவர் வீட்டு தோட்டத்தின் மது விற்றார். இவரையும் போலீசார் கைது செய்தனர்.