செய்திகள்

திண்டுக்கல் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.23 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல் அருகே பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.22 லட்சத்து 77 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

ஆத்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு அருகே பறக்கும் படை தணிக்கை குழு அதிகாரி மனோகரன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது திண்டுக்கல் ஆக்ஸிஸ் பேங்கிலிருந்து தனியார் நிறுவன வண்டி மூலமாக ரூ.18 லட்சம் சித்தரே வில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் நிரப்புவதற்காக எடுத்து வரப்பட்டது.

இந்த பணத்திற்கு எந்த ஆவணமும் இல்லாததால் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி துணை ஆட்சியர் சிவக்குமார் தாசில்தார் பிரபா முன்னிலையில் ஒப்படைக்கபட்டு பின்னர் திண்டுக்கல் கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த பணம் வங்கி பணமாகவே இருந்தாலும் மாலை 6 மணிக்கு மேல் கொண்டு செல்லக் கூடாது இதற்கு ரூட் சாட் வேண்டும். இதுவும் அவர்க ளிடம் இல்லை நாங்கள் கருவூலத்தில் ஒப்படைத்து விடுகிறோம். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த பணத்திற்கு உரிய ஆவணங்களை காண் பித்து பணத்தை பெற்று கொள்ளலாம் என்றார். இதே போல் கரிசல்பட்டியை சேர்ந்த பாலகுரு என்ற ஆட்டு வியாபாரி.

செம்பட்டி சந்தையில் ஆடு வாங்குவதற்காக ரூ.70, 600-த்துடன் இரு சக்கர வாகனத்தில் வரும் போது திண்டுக்கல் மாவட்ட கலெக்டரின் நிலையான குழு பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இல்லாததால் ஆட்டு வியாபாரி கொண்டு வந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

ஒட்டன்சத்திரம் தேர்தல் பறக்கும்படை அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் ஒட்டன் சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டிபோலீஸ் நிலையம் முன்பு வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே கேரளாவிலிருந்து திண்டுக் கல் சென்ற பால் ஏற்றி வந்த மணிகண்டபிரபு ஓட்டி வந்த வாகனத்தை ஆய்வு செய்ததில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.4,07,410-த்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர். #LokSabhaElections2019