செய்திகள்

பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம்வந்த பழம்பெரும் நடிகர் திலிப் குமார்(95) உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #DilipKumar

மாலை மலர்

அந்தாஸ், மதுமதி, தேவதாஸ், முகல்-இ-ஆஸம், கங்கா ஜமுனா உள்ளிட்ட பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்தவர் திலிப் குமார். இவரது நடிப்பில் வெளியான ராம் அவுர் ஷியாம் என்ற திரைப்படத்தை தழுவி எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படம் வெள்ளிவிழா கண்டு சாதனை படைத்தது.

மூச்சுத்திணறல் மற்றும் சளி சார்ந்த உபாதைகளுக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.