நேற்று இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 159 ரன்கள் சேர்த்தது. பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கிறது. தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க ஜோடியாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி 7 ரன்கள் எடுத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது.
இந்த 7 ரன்கள் மூலம் இருவரும் இணைந்து முதல் ஜோடிக்கு 1110 ரன்கள் குவித்துள்ளனர். இதன்மூலம் முதல் ஜோடிக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையைப் படைத்துள்ளது.