செய்திகள்

டெல்லி போலீசார் அதிரடி - 4.5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 4.5 டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #RedSandalwood #Delhi

புதுடெல்லி:

டெல்லியில் குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது சந்தேகப்படும் படியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் லாரியில் 4.5 டன் அளவிலான தங்கம் கடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த கடத்தல் விவகாரத்தில் முதற்கட்டமாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து இன்று மாலை மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதிக அளவிலான இந்த செம்மரக்கட்டைகளின் கடத்தலில் ஈடுபட்டிருக்கும் கும்பல் குறித்த தீவிர விசாரணை டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் நடைபெற்று வருகிறது. #RedSandalwood #Delhi