இந்நிலையில் உலகக் கோப்பைக்குப்பின் டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் தென்ஆப்பிரிக்கா கேப்டன் கிரேம் ஸ்மித் கூறியுள்ளார்.
இதுகுறித்து கிரேம் ஸ்மித் கூறுகையில் ‘‘ஓய்வு குறித்து டி வில்லியர்ஸ் அதிக அளவில் யோசித்திருப்பார். உலகக்கோப்பைக்கு பிறகு டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றிருக்கனும். அவர் சிறிது காலம் விளையாடமல் இருந்து அதன்பின் அணிக்கு திரும்பி இந்தியா, ஆஸ்திரேலியா தொடரின்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடினார்.