நேற்று வங்காள தேசத்திற்கு எதிராக நடந்த போட்டியில் 166 ரன்களை வார்னர் குவித்தார். இதனால் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
2019 உலக கோப்பையில் இதுவே அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் ஆகும். இது குறித்து வார்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஆட்டத்தின் தொடக்கத்தில் புதிய பந்துகளை எதிர்க்கொள்ளும் போது அதற்கு மதிப்பளிக்க வேண்டும். மைதானத்தின் சூழலையும் கருத்தில் கொண்டுதான் ஆட வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளாக நான் நல்ல முறையில் நடந்து கொள்வதால் இப்படிச் செல்லமாக அழைக்கின்றனர். நான் வாழ்க்கையிலும், கிரிக்கெட்டிலும் கோபமாக நடந்துக் கொள்ள முடியாத சூழலில் இருக்கிறேன்.
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கடந்த ஆண்டு வார்னருக்கு ஓராண்டு காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.
தடை காலம் முடிவடைந்து அவர் சில மாதங்களுக்கு முன்னர்தான் கிரிக்கெட் களத்துக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.