செய்திகள்

ஒப்பந்தம் கையெழுத்து ஆகாதது எங்கள் தவறா?: வார்னர் ஆதங்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும், வீரர்களுக்கும் இடையிலான சம்பள பிரச்சினையில், முன்னணி வீரரான வார்னர் கிரிக்கெட் வாரியத்தை சாடியுள்ளார்.

மாலை மலர்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட கெடு விதித்தது. என்றாலும் வீரர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர். இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வீரர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. ஒப்பந்ததம் ரத்து செய்யப்பட்டதால் 234 வீரர்கள் வேலையை இழந்துள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு டேவிட் வார்னர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘‘ஆஸ்திரேலிய அணியின் தொப்பிதான் எனக்கு உலகம். நான், அனைத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் என எல்லோரும் அணிக்காக விளையாட விரும்புகிறோம். நாங்கள் 30 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் கிராஸ்ரூட்டிற்காக விட்டுக்கொடுக்க முன்வந்தோம்.. இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.