இந்நிலையில் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் உமர் அக்மர், அகமது ஷேசாத் போன்ற வீரர்களை புறக்கணித்ததன் மூலம் மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் கிரிக்கெட்டை சீரழித்துவிட்டார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துல் காதிர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அப்துல் காதிர் கூறுகையில் ‘‘மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் கிரிக்கெட்டை சீரழித்துவிட்டார். அவர் அகமது ஷேசாத், சமி அஸ்லாம், சல்மான் பட், உமர் அக்மல், சோஹைல் கான் ஆகிய இவர்களுடன் மேலும் பல வீரர்களை இவர் புறந்தள்ளிவிட்டார். இவர்களின் அனுபவம் மற்றும் ஆட்டத்திறனால் பாகிஸ்தான் அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றிருக்க முடியும்.