பாபர் ஆசம் இமாம் உல் ஹக் 
செய்திகள்

வங்காள தேசத்திற்கு எதிராக 315 ரன்களே அடித்தது பாகிஸ்தான்: அரையிறுதி கனவு தகர்ந்தது

வங்காள தேசத்திற்கு எதிராக 315 ரன்களே அடித்துள்ளதால், உலகக்கோப்பைக்கான அரையிறுதி வாய்ப்பை இழந்தது பாகிஸ்தான்.

பகர் ஜமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பகர் ஜமான் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து இமாம் உல் ஹக் உடன் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் பாகிஸ்தான் 400 ரன்களை தாண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதன்பின் வந்த முகமது ஹபீஸ் 27 ரன்னிலும், ஹரிஸ் சோஹைல் 6 ரன்னிலும், சர்பராஸ் அகமது 2 ரன்னிலும் (ரிட்டையர்டு ஹர்ட்) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.