ஸ்மித் 
செய்திகள்

224 ரன்களே இலக்கு: சேஸிங் செய்து நடப்பு சாம்பியனை வெளியேற்றுமா இங்கிலாந்து?

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு 224 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.

மாலை மலர்

நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் முதலில் பேட்டிங் செய்த அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளதால் இங்கிலாந்து ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.

டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை கிறிஸ் வோக்ஸ் வீசினார். முதல் பந்தை டேவிட் வார்னர் பவுண்டரிக்கு விரட்டினார். 2-வது ஓவரை ஜாப்ரா ஆர்சர் வீசினார். ஆரோன் பிஞ்ச் தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழந்தார்.

14 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தத்தளித்தது. அப்போது ஸ்மித் உடன் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து  மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டது.

அலெக்ஸ் கேரி 46 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் ரன்ஏதும் எடுக்காமல் ரஷித் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஒரே ஓவரில் ஆஸ்திரேலியா இரண்டு விக்கெட்டுக்களை இழந்ததால், அதில் இருந்து மீண்டு வர இயலவில்லை. அப்போது ஆஸ்திரேலியா 28 ஓவரில் 118 ரன்கள் எடுத்திருந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் ரஷித், கிறிஸ் வோக்ஸ் தலா மூன்று விக்கெட்டுக்களும், ஆர்சர் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.