சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ளது ரிச்சி தெரு. மிகவும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் இன்று மதியம் ஒரு பெண்ணை சிலர் திடீரென சுற்றி வளைத்து தாக்கினர்.
அரிவாளால் அந்த பெண்ணை வெட்டியதுடன், நாட்டு வெடிகுண்டையும் அவர் மீது வீசினர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலைவெறித் தாக்குதலால் அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டது.