காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் பலியானார்கள்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற வீரரும் இந்த தாக்குதலில் பலியானார்.
பலியான வசந்தகுமாருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவரது உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடக்கிறது.
வயநாடு, லக்கிடியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் வசந்தகுமார் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.
பின்னர் ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடக்கிறது. வசந்த குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று காலை முதலே ஏராளமான மக்கள் கண்ணீருடன் காத்திருந்தனர்.