திருப்பூர்-வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த ஒரு ரெயில் கடந்து சென்றது. அப்போது வஞ்சிப்பாளையம் பகுதியில் வந்த போது தண்டவாளத்தில் பயங்கர சத்தம் கேட்டது.
இதையடுத்து ரெயில் என்ஜின் டிரைவர் இது குறித்து திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்றனர்.
அப்போது 2 தண்டவாளங்கள் இணையும் பகுதியில் விரிசல் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விரிசல் சரி செய்யும் பணி முழுவீச்சில் நடந்தது.
தண்டவாள விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
கோவையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து ரெயில்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டது.