கோப்பு படம் 
செய்திகள்

வேலூர் எஸ்.பி. ஆபிசில் காதல் ஜோடி தஞ்சம்

குடியாத்தம் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி வேலூர் எஸ்.பி. ஆபிசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

மாலை மலர்

வேலூர்:

குடியாத்தம் அருகே உள்ள ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 23). அதே பகுதியை சேர்ந்த மோனிகா (20) இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

இதற்கு அவர்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடியினர் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இன்று காலை வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர்.