செய்திகள்

ஐதராபாத் கோர்ட்டில் சந்திரபாபு நாயுடு, மகன் லோகேஷ் மீது ஊழல் வழக்கு

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, அவரது மகனும், அமைச்சருமான லோகேஷ் மற்றும் உறவினர் ஆகியோர் போலி கம்பெனிகளை உருவாக்கி ஊழல் செய்துள்ளதாக ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #Chandrababunaidu

மாலை மலர்

நகரி:

ஆந்திராவில் உள்ள முண்தகுடு கட்சி நிறுவன தலைவர் ஜெ.ராவண் குமார்.

முன்னாள் நீதிபதியான இவர் ஐதராபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், “ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, அவரது மகனும், அமைச்சருமான லோகேஷ் மற்றும் உறவினர் வேமுரி ரவிக்குமார் ஆகியோர் போலி கம்பெனிகளை உருவாக்கி ஊழல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார். இந்த மனுவை கோர்ட்டு விசாரணைக்கு ஏற்று கொண்டது. #Chandrababunaidu #Hyderabadcourt