திருச்சி:
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிக்கப்பட்ட 150 பேரில் பலர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் இன்னும் 2 நாளில் வீடு திரும்ப உள்ளனர். அதிகம் பேர் பாதிக்கப்பட்டதால் திருச்சி ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டதுடன் சிவப்பு மண்டலத்திலும் இடம் பெற்றிருந்தது. தற்போது மாவட்டத்தில் வைரஸ் பரவுவது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .
கடந்த ஒரு வாரமாக யாருக்கும் புதிதாக வைரஸ் தொற்று பாதிக்கவில்லை. இதனால் திருச்சி மாவட்டம் கொரானா வைரஸ் பரவலில் இருந்து விலகி உள்ளது. இதையடுத்து சிவப்பு மண்டலத்திலுள்ள திருச்சி ஆரஞ்சு மண்டலத்திற்கு மாற வாய்ப்புள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.