கொரோனா வைரஸ் தொற்று பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் தாக்கி வருகிறது. குழந்தைகளையும், சிறார்களையும் பெருமளவில் பாதிப்பதும் தெரிய வந்தது. இதனால் சுவிட்சர்லாந்து அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு 10 வயதுக்கு உட்பட்ட சிறார்களையும், குழந்தைகளையும் அவர்களின் தாத்தா, பாட்டிமார்கள் கொஞ்சி மகிழ்ந்து கட்டித் தழுவ தடை விதித்தது.
குழந்தைகள், சிறார்கள் மூலமாக கொரோனா மூத்த குடிமக்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மிக அண்மையில் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் நடத்திய ஒரு ஆய்வின் முடிவில் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் மூலம் கொரோனா முதியோருக்கு பரவாது என்பது தெரியவந்துள்ளது.