மத்திய அரசு 
செய்திகள்

சிவப்பு மண்டல பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் தொடரும்- மத்திய அரசு

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் சிவப்பு மண்டல பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாலை மலர்

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விமானம், மெட்ரோ, ரெயில் போன்றவை நாடு முழுவதும் இயங்காது என்றும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் சிவப்பு மண்டல பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

பச்சை மண்டலத்தில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்கலாம் என்றும், ஆரஞ்சு மண்டலங்களில் கார்களில் ஓட்டுநருடன் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.