நீலகிரி:
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு நீலகிரி மாவட்டத்தில் நேற்று வரை 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 33 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் 67 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொரோனா உறுதி செய்யப்பட்ட முதியவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
முதியவர் உயிரிழந்ததன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.