மெரினா கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர். 
செய்திகள்

மெரினா கடற்கரையில் 35 பெண் இன்ஸ்பெக்டர்கள் கொரோனா விழிப்புணர்வு

மெரினா கடற்கரையில் 35 பெண் இன்ஸ்பெக்டர்கள் வரிசையாக அணிவகுத்து கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டனர். கைகளை கழுவுவது எப்படி என்பது பற்றி நடித்து காட்டினர்.

மாலை மலர்

சென்னை:

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் போலீசார் சாலைகளில் ரோந்து சுற்றி வந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் விழிப்புணர்வு பிரசாரத்திலும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் மெரினா கடற்கரையில் 35 பெண் இன்ஸ்பெக்டர்கள் வரிசையாக அணிவகுத்து கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டனர். கைகளை கழுவுவது எப்படி என்பது பற்றி நடித்து காட்டினர்.