சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உத்தரபிரதேச முதல்-மந்திரியும், பா.ஜனதாவின் நட்சத்திர பேச்சாளருமான யோகி ஆதித்யநாத் பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
நேற்று முன்தினம் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அவர், ‘அனுமன் ஒரு தலித்’ என கூறியதாக தெரிகிறது. இது மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அத்துடன் தேர்தல் கமிஷனிலும் புகார் செய்யப்பட்டது.