நாடாளுமன்ற மக்களவையில், ‘ஆள் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு) மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. ஆட்கள் கடத்தப்படுவதை தடுப்பதும், கடத்தப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பதும், கடத்தல்காரர்களை தண்டிப்பதும் இதன் நோக்கம் ஆகும்.
ஆள் கடத்தலை தடுக்க மாவட்டந்தோறும் சிறப்பு போலீஸ் அதிகாரிகளை நியமிப்பதற்கும், கடத்தப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் பணிக்காக சிறப்பு அதிகாரியை நியமிப்பதற்கும் மாநில அரசுகளுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.