செய்திகள்

எதிரிகளால் உடலுறுப்பை இழக்கும் துணை ராணுவ வீரர்களுக்கான இழப்பீடு உயர்வு

எதிரிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றும் முயற்சியில் காயமடைந்து உடலுறுப்புகளை இழந்து நூறு சதவீதம் மாற்றுத் திறனாளியாக மாறிவிடும் துணை ராணுவ வீரர்களுக்கான கருணைத் தொகை 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாலை மலர்

தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி, வன்முறை மற்றும் கலவரங்களை கட்டுப்படுத்தும் பணி, பிறநாட்டு எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணி ஆகியவற்றின்போது படுகாயம் அடைந்து, உடலுறுப்புகள் சிதைந்து 100 சதவீதம் மாற்றுத் திறனாளிகளாக மாறிவிடும் துணை ராணுவப் படையினருக்கு கருணைத் தொகையாக 9 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.