செய்திகள்

பரபரப்பான கட்டத்தில் கொழும்பு டெஸ்ட்: இலங்கைக்கு தேவை 218 ரன்; ஜிம்பாப்வேவுக்கு 7 விக்கெட்

பரபரப்பான கட்டத்தில் கொழும்பு டெஸ்ட் உள்ளது. இலங்கை அணியின் வெற்றிக்கு 218 ரன்கள் தேவைப்படுகிறது. ஜிம்பாப்வே 7 விக்கெட்டுக்களை கைப்பற்ற வேண்டும்.

மாலை மலர்

முதல் இன்னிங்சில் 10 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 6 விக்கெட் இழப்பிற்கு 252 எடுத்திருந்தது. இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே 377 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

ஒட்டுமொத்தமாக இலங்கையை விட 387 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர் 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக குணரத்னே, உபுல் தரங்கா ஆகியோர் களம் இறங்கினார்கள். தரங்கா 27 ரன்னிலும், குணரத்னே 48 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் சண்டிமல் 15 ரன்னில் ஆட்டம் இழந்தார்.


சண்டிமல் கேட்ச் ஆன காட்சி

4-வது விக்கெட்டுக்கு மெண்டிஸ் உடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 4-வது நாள் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.