செய்திகள்

கோவை அருகே ஆட்டோ டிரைவர் சுருண்டு விழுந்து மரணம்

கோவை அருகே ஆட்டோ டிரைவர் சுருண்டு விழுந்து மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கோவை:

கோவை பேரூர் வெள்ளலூர் நால்வர் வீதியை சேர்ந்தவர் குமரவேல் (45). ஆட்டோ டிரைவர். இன்று காலை பீளமேடு போலீஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோவை நிறுத்தி விட்டு சவாரிக்காக காத்திருந்தார்.

அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் மாரடைப்பால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.