ஆளுநர்-முதல்வர் சந்திப்பு (கோப்பு படம்) 
செய்திகள்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை திடீரென சந்தித்தார்.

மாலை மலர்

சென்னை:

சென்னை கிண்டியில் அமைந்துள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை திடீரென சந்தித்தார்.

இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது. அவருடன் தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்றனர்.